தெளிந்த நீரோடையாக கானகத்தில்
அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை...
சுற்றுச்சூழலின் அந்தபுரத்தில்
கண் மயங்கி
பகலிலும் உறங்குகிறது..
தோல்வியைக்
கனவிலும் சுமக்காத வாழ்க்கை இன்பத் தேரோட்டம் போகிறது..
மலர்கள் தங்கள்
மரணத்தை எண்ணி
கவலைப்படுவதில்லை
வாழும்வரை சுற்றுப்புறத்தைத்
தன் மணத்தால் ஆசிரளிக்கிறது..!
எதிர்வரும் மனிதருக்குப்
புன்னகையை வழங்கு
இயற்கை கற்றுத் தந்த
அன்பை
எங்கும் பெருக்கு..!
உயர்வும் தாழ்வும்
வறுமையும் பெருமையும்
பரந்த உலகில் படர்ந்து இருப்பதைப் பார்த்து
வாழ்க்கைப் பாடம்
கற்றுக்கொள்..!
உன்னை நிழலாய்ப்
பின் தொடரும்
எதிர்பாராத நிகழ்வுக்கு
காரணம் இருக்கிறது..
மிக எளிதான வாழ்க்கை
கடினமாக உருமாறினால்
அது சமூகத்தின் தவறன்று,.!
வாழ்க்கை தத்துவம்
மென்மையான
மலராகவே உள்ளது..
புரிதல் ஒன்றே
உள்ளத்தில் புதுமையை மலரச் செய்யும்!

கவிஞர் சத்யா பிரான்சிஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக