12.03.2021
உலகில் பரவியிருக்கும் காற்று
புரிந்து கொள்ள முடியாத அதிசயம்
கையில் தொட்டுணர முடியாத அற்புதம்!
புயல் காற்றின் குரல்வலையை நெறிக்க முனைந்த
மாயக் கரங்கள் தோற்று விழுந்தன!..
கடலில் மீன் சுவாசிக்கும்
பருந்தும் ஆகாயத்தில் சுகராகம் வாசிக்கும்
பசும் காடுகளே மனிதனின்
நச்சுக்காற்றைத் தியாக விசுவாசத்துடன் சுவாசித்து பரிசுத்தத்தைப் பரப்புகிறது!
உலக உயிர்களுக்கு
காற்று இறைவன்!
காற்றில்லாத கோளங்கள்
இறை சுவாசமில்லாத நரகம்..!
புதையுண்ட கல்வெட்டுகளில்
கற்காலத்தை அறிந்த ஆய்வாளன்
ஆண்டவன் வயதைக் கணக்கிடுவதில்
படு தோல்வி..
மனித அறிவுக்கும்
விஞ்ஞானத் தொழில் நுட்பத்திற்கும்
காற்று சவால் தருகிறது..
அறிவியல் மனிதன்
இயற்கைக் காற்றை உற்பத்தி செய்வானா?
(மலேசியம்)
அருமை .....
பதிலளிநீக்கு