22.03.2021
பதிவு செய்தவர்: தேவிசர கடாரம்
ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போது மாணவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்டார்.
"மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்க துடிக்கிறீர்களா நீங்கள்?"
மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர். வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம் ...ஐயா’ என்றார்கள்.
ஆசிரியர்க்கு மிகுந்த வியப்பு. ஒவ்வொருவராக அழைத்து "மன்னிக்கவும்... மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள உள்ளன?" என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஐந்து பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள். மாணவர்களுக்குப் பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார் .
ஒவ்வொருவரிடமும் ஒரு பையை கொடுத்தார். வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளிப் பழம் கொண்டு வரப்பட்டது. யார் மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிப் பழங்களைப் பையில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்தத் தக்காளி பை எப்போதும் உங்கக் கூடவே இருக்க வேண்டும். தூங்கும் போதும் அருகிலேயே வைத்து இருக்க வேண்டும் என கட்டளையிட்டார்.
ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள். ஓரிரு நாட்கள் ஒரு கதையும் இல்லை. ஆனால் அடுத்தடுத்த நாடகளில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின.
நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப் பட்டனர் ஒரு கட்டத்தில் ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர் .
மௌனமாகப் புன்னகைத்த ஆசிரியர், "நாற்றம் வீசுபவை தக்காளிகள் மட்டும் அல்ல அந்த நாற்றத்தை போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை, பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால் தக்காளிப் பையை தூக்கி எறியுங்கள் என்றார்.
அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு ஏற்பட்டது. அப்போதே தக்காளி பைகளைக் குப்பைத் தொட்டியில் வீசினார்கள் பகை மறந்து ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டு வகுப்பறைக்குத் திரும்பினர்.
நாம் ஒவ்வொருவரும் இப்படித் தான் பழிவாங்கும் எண்ணத்தோடு காத்து இருக்கிறோம். தக்காளி பை நாற்றத்தை நினைவில் கொள்வோம். பகைமை மறப்போம். பகுத்தறிவோடு பயணிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக