31 டிசம்பர் 2020

நமக்கு ஏன் வயதாகிறது: புதிய ஆய்வு - முத்துசாமி கோலக்கிள்ளான்

23.12.2020

இந்த உலகத்தில் பிறப்பவர்கள் எல்லாம் ஒரு நாள் இறப்பைச் சந்திக்கத்தான் வேண்டும். நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது. அதே சமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்குப் பதில் சொல்ல முடியும்.

Martin Hetzer

அதாவது ஒரு குழந்தை பிறந்த பின்பு நாட்கள், வருடங்கள் செல்ல செல்ல அதற்கு வயதாகிறது. வயதாக வயதாக உடல் மெலிந்து, நோய்கள் ஏற்பட்டு இறுதியில் இறந்து போகிறது.

ஆக பிறந்த ஒவ்வொருவரும் இறந்து போவதற்குக் காரணம் நமக்கு வயதாகிப் போவது அல்லது மூப்பு அடைவதுதான்! ஆமாம், நமக்கு ஏன் வயதாகிறது?

இந்தக் கேள்விக்கு உலக அறிவியலாளர்கள் யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் நான் கண்டுபிடித்து விட்டேன் என்கிறார் அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய (Salk Institute for Biological Studies) விஞ்ஞானி மார்டின் ஹெட்சர் (Martin Hetzer).

நியூரான்கள் என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக் கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP (extremely long-lived proteins – ELLP) எனும் ஒரு வகை புரதங்கள் இருக்கின்றன. 'ELLP' என்றால் மிக மிக நீண்ட ஆயுளை உடைய புரதங்கள் என்று பொருள்.

Longevity Cells Found: Scientists at the Salk Institute report they have found a component of brain cells that could explain how the aging process occurs. The scientists found that certain proteins, called " long-lived protein supporting" (extremely long-lived proteins – ELLP), found on the surface of the nucleus of neurons, is thought to have longevity in living creatures.

நியூக்ளியசிற்கு உள்ளேயும்; நியூக்ளியசில் இருந்து வெளியேவும் என்னென்ன பொருட்கள் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே இந்த ELLP புரதங்கள்தான். இதனால் இவற்றுக்குப் 'போக்குவரத்து வழித் தடப் புரதங்கள்' என்றும் மற்றொரு பெயரும் உண்டு.

முக்கியமாக நச்சுப் பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே செல்லாமல் தடுப்பது இந்த ELLP புரதங்களே! உடலின் பிற புரதங்கள் சேதம் அடைந்தால் உடனே அவை புதிய புரதங்களால் நிரப்பப்படும்.

ஆனால் வேதியல் மாற்றங்கள் மற்றும் பிற பாதிப்புகளால் ELLP புரதங்கள் சேதம் அடையும் போது அவற்றுக்கு மாற்றாக, புதிய ELLP புரதங்கள் உற்பத்தி செய்யப் படுவது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இதன் காரணமாக, பல நச்சுப் பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே சென்று நியூரான்களின் உள்ளே இருக்கும் மரபுப் பொருளான DNA-வை பாதிக்கின்றன. இதனால் மரபணுக்களின் செயல்பாடுகள் மாற்றப்பட்டு உயிரணுக்கள் மூப்பு அடைகின்றன என்று கண்டு அறிந்து உள்ளனர் மார்டின் ஹெட்சர் தலைமையிலான ஆய்வாளர்கள்.

பொதுவாக உடலில் உள்ள புரதங்களின் வயது இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே. அதாவது மூன்று நாட்களுக்கு பின்னர் அவை செயல் இழந்து போகும். ஆனால் ELLP புரதங்களின் வயதோ மிக மிக அதிகம்.

எடுத்துக்காட்டாக எலிகளின் உடலில் உள்ள ELLP புரதங்களின் வயதும் எலியின் வயதும் ஒன்று என்கிறார் மார்டின் ஹெட்சர்.

இத்தகைய சிறப்புப் பண்பு உடைய ELLP புரதங்களையும், இவற்றுக்கும் மூப்பு அடைதலுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் உலகில் முதன்முதலில் கண்டு அறிந்த பெருமை ஆய்வாளர் மார்டின் ஹெட்சரையே சேரும்.

மூப்பு அடைதல் தொடர்பான இதற்கு முந்தைய ஆய்வுகளில், இயல்பான மரபணு செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களே மூப்பு அடைதலுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால் உயிரணுக்களின் நியூக்ளியசில் இருக்கும் ELLP புரதங்கள் பாதிப்பு அடைவதால், நியூக்ளியசிற்கு உள்ளே நச்சுப் பொருட்கள் சென்று உள் இருக்கும் DNA-வை சேதப் படுத்துவதாலேயே மரபணு செயல்பாடுகள் மாற்றம் அடைகின்றன.

இதை ஆய்வாளர் மார்டின் ஹெட்சர் கண்டறியும் வரை, மரபணு செயல்பாட்டு மாற்றங்களுக்கான காரணம் என்னவென்று உலகின் பிற ஆய்வாளர்களுக்குத் தெரியாது என்பது குறிப்பிடத் தக்கது.

உடலின் முக்கிய பாகங்களான இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறைந்து போவதுதான் மூப்பு அடைதலின் முதல் மற்றும் அடிப்படை அறிகுறி.

இந்தப் பாகங்களின் உயிரணுக்களில் நிகழும் புரத சமன்பாடு (protein homeostasis) அல்லது உட்புற உறுதிநிலை (internal stability) பாதிக்கப் படுவதே அவற்றின் செயல்பாடு குறைவதற்கான முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்.

ஆய்வாளர் மார்டின் ஹெட்சரின் ஆய்வு முடிவுகளில் (மூளை உயிரணுக்களான) நியூரான்களின் செயல்பாடுகள் குறைவதற்கு ELLP புரதங்கள் சேதம் அடைவதே காரணமாக இருக்கக் கூடும் என்று கண்டு அறியப்பட்டு உள்ளது.

நியூரான்கள் தவிர்த்த உடலில் உள்ள பிற உயிரணுக்களின் செயல்பாடுகள் குறையும் போது அவை, அவற்றின் சேதம் அடைந்த பழைய புரதங்களை அழித்து புதிய புரதங்களை உற்பத்தி செய்து விடுகின்றன.

இதனால் அவற்றின் செயல்பாடு மீண்டும் அதிகரித்து விடுகிறது. ஆனால் நியூரான்களிலுள்ள புரதங்கள் ஒரு முறை சேதம் அடைந்தால் அவற்றுக்கு மாற்றாக புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவது இல்லை என்பது துரதிஷ்டவசமானது.

மூப்பு அடைதல் தொடர்பான இந்த ஆய்வு முடிவுகளைக் கொண்டு நரம்புச் சிதைவு குறைபாடுகளான அல்ஷெய்மர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் ஏற்படுவதற்கான மூலக் காரணங்களை அறிந்து கொள்ளவும், இந்த நோய்கள் குறித்த மேல் அதிகப் புரிதலையும் பெற முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

'என்றும் பதினாறு' மார்கண்டேயனைப் பற்றி படித்து இருக்கிறோம். இந்த ஆய்வு முடிவுகளைப் பார்க்கும் போது, ஒருவேளை மார்கண்டேயரின் ELLP புரதங்கள் அவருடைய பதினாறாவது வயதுக்குப் பிறகு சேதம் அடையவே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Read more:
https://www.trussty.com/2012/05/longevity-cells-found.html#ixzz6iCbG50X6




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக