28 டிசம்பர் 2020

அன்றும் இன்றும் தமிழரின் துன்பம் - பாதாசன்

 19.12.2020

ஆங்கிலவர் ஆட்சியிலே நேரில் துன்பம் !
  அடுத்துஜப்பான் ஆட்சியிலும் தெரிந்தே இன்னல் !
தாங்கியவர் மலேசியத்துத் தமிழர், நாடு
  தன்னாட்சி பெற்றபின்னர் காணும் கேடோ
ஓங்கிடினும் அவற்றினிலே ஒன்றும் கண்ணுக்
  கொருவருக்கும் தெரியாமல் நடக்கும் கோடி
ஆங்கில, ஜப்பானியர்தம் தொல்லை குன்று ;
  அதைமிஞ்சும் தமிழர்படும் தொல்லை இன்று !
                                                -பாதாசன்


புனைபெயர்கள்: பாதாசன், மஞ்சரி

தொழில்: பத்திரிகை ஆசிரியர்; மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்புப் பொறுப்பாசிரியர்.

எழுத்து: 1960 முதல் எழுதி வரும் முன்னணிக் கவிஞர். கதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். நூல்கள்: "பாதாசன் கவிதைகள்", "ஞாயிறு களம்" (கட்டுரைத் தொகுப்பு)

சிறப்புக் குறிப்புகள்: கோலாலம்பூர் கவிதைக் களம் என்னும் கவிதைப் பயிற்சி மன்றத்தின் பொறுப்பாளர்; மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றம், முத்தமிழ்ப் படிப்பகம் ஆகியவற்றின் மூத்த உறுப்பினர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக