17.12.2020
மலேசியத் திராவிடர் கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவர் மானமிகு. பி.எஸ். மணியம் அவர்கள் உடல் நலமின்றி பெட்டாலிங் ஜெயா யுனிவர்சிட்டி மருத்துவமனையில் மறைவுற்றார். அவர் மகள் ம.தி.க மகளிர் தேசியத் தலைவி வழக்கறிஞர் சு. குமுதா அவர்கள் அந்தச் செய்தியை உறுதிப் படுத்தினார்.
கழகத்தில் பணியாற்றியவர்களில் நீண்ட காலம் சேவையை வழங்கியவர் என்ற தனி ஒரு பெருமை, மறைந்த பி. எஸ். மணியம் அவர்களுக்கு உண்டு.
கழக முன்னாள் தேசியத் தலைவர் திருச்சுடர் கே.. ஆர். இராமசாமி அவர்களுடன் நீண்ட நாள் பல பொறுப்புகள் ஏற்றதோடு, இன்று நமக்கென்று சொந்த கட்டடம்; மலாயன் மென்சன் கட்டடம்; செமளின் கட்டடம் பெற்றதில் பி.எஸ். அவர்கள் அதிகம் பங்காற்றி உள்ளார்.
கட்டடக் குழுத் தலைவராக மறைந்த அ. மருதமுத்து அவர்களுடன் கட்டடக் குழுச் செயலாளராகப் பணியாற்றிய பெருமையும் உண்டு.
இதற்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல் பி. எஸ். மணியம் அவர்கள்; 2010-ஆம் ஆண்டில் கழகத்தின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
கழகம் ஒரு புத்துணர்ச்சியுடன் செயல்படுவற்கு தன்னால் முடிந்த அளவில் கழகத்தைச் சீராக நடத்திச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு.
மேலும் அவர் காலத்தில் தான் கழகத்தின் தேசியத் தலைவராக இருப்பவர் இரண்டு தவணைக் காலம் போதும்; மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற முறையைக் கொண்டு வந்தார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பின் மற்றவர்களுக்கு வழிவிட்டு, கழக இளைய தலைமுறைகள் செயல் படுவதை வெளியில் இருந்து ஊக்கப் படுத்திய நல்ல எடுத்துக் காட்டான ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்தார்.
கழக அன்பர்கள் மத்தியிலும், முன்னாள் தமிழ் அமைச்சர்களுடனும் நட்பு பாராட்டியவர். அவர் மறைவு கழகத்திற்கு மட்டும் அல்ல; அவர் குடுபத்திற்கும் பெரும் இழப்பாகும்.
அவர் தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
ச.த. அண்ணாமலை,
ம.தி.க. தேசியத் தலைவர்.
17.12.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக