16.12.2020
BK Kumar: உலகில் மக்களினம் முதல் முதல் தோன்றி வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவது குமரிக்கண்டம் என்பதாகும்.
ஆய்வாளர்கள் இது இன்றைய இந்திய ஒன்றியத்தின் தென்பகுதியும் இந்தியப் பெருங்கடலில் மடகாசுகர் முதல் ஆத்திரேலியா வரையும் பரந்து விரிந்த நிலப் பரப்பாக இருந்தது என்கின்றனர்.
குமரிகண்டத்தின் தென்பகுதி:
ஏழ்தெங்குநாடு,
ஏழ்பனைநாடு,
ஏழ்முன்பாலைநாடு,
ஏழ்பின்பாலைநாடு,
ஏழ்குன்றநாடு,
ஏழ்குணகாரைநாடு,
ஏழ்குறும்பனைநாடு,
என 49 பிரிவுகளாகச் சிறந்தோங்கித் திகழ்ந்தன. புலவர் கா.ப. சாமி அவர்கள் இன்றைய மலாயா, சாவா, சுமத்ரா, போர்னியோ, இலங்கை யாவும் இந்த 49 நாடுகளைச் சேர்ந்தவையே ஆகும் என்று கூறுகின்றார்.
📖 நூல்: வரலாற்றில் தமிழகம், பக்கம்~32
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக