27 டிசம்பர் 2020

தமிழர் தாயகம் - பி.கே.குமார்

16.12.2020

BK Kumar: உலகில் மக்களினம் முதல் முதல் தோன்றி வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவது குமரிக்கண்டம் என்பதாகும்.

ஆய்வாளர்கள் இது இன்றைய இந்திய ஒன்றியத்தின் தென்பகுதியும் இந்தியப் பெருங்கடலில் மடகாசுகர் முதல் ஆத்திரேலியா வரையும் பரந்து விரிந்த நிலப் பரப்பாக இருந்தது என்கின்றனர்.

குமரிகண்டத்தின் தென்பகுதி:

ஏழ்தெங்குநாடு,

ஏழ்பனைநாடு,

ஏழ்முன்பாலைநாடு,

ஏழ்பின்பாலைநாடு,

ஏழ்குன்றநாடு,

ஏழ்குணகாரைநாடு,

ஏழ்குறும்பனைநாடு,

என 49 பிரிவுகளாகச் சிறந்தோங்கித் திகழ்ந்தன. புலவர் கா.ப. சாமி அவர்கள் இன்றைய மலாயா, சாவா, சுமத்ரா, போர்னியோ, இலங்கை யாவும் இந்த 49 நாடுகளைச் சேர்ந்தவையே ஆகும் என்று கூறுகின்றார்.

📖 நூல்: வரலாற்றில் தமிழகம், பக்கம்~32



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக