18.01.2021
நூலாசிரியர்: எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில் ந.அதியமான்)
Jayaseela Stephen is Professor of Maritime History and Coordinator of the UGC - Special Assistance Programme at Visva - BHarati University, Shantiniketan.
He has held teaching and research appointments at University of Nebraska, Lincoln City, (1996), University of Connecticut, Storrs, (2004) USA.
He is also former fellow of the Ecole Franoise d’ Extreme-Orient, Paris/Pondicherry (1994-1999),
Editor of Revue HIstorique: Societe de l’ Histoire de Pondicherry (1995-1997),
Senior Advisor to Tata Central Archives, Pune, (2000-2001)
Head of the Department of History (2001-2004).
He is a Member of Executive Committee in the Indian Historical Records Commission nominated by the Government t of India.
He is the author of numerous books:
1. The Coromandel Coast and its Hinterland: Economy, Society and Political System, 1500-1600 (1997),
2. Portuguese in the Tamil Coast: Historical Explorations in Commerce and Culture, 1507-1749 (1998),
3. Rangappa Thiruvengadam Pillai Naatkurippu, Vol. I (1760-1768) Vol. II, 1762-1766, (2000),
4. The Diary of Rangappa Thiruvengadam Pillai, 1760-1768: Translated from Original Tamil with Notes (2001),
5. Portuguese- Tamil Grammar: Modernization and Democratisation of Tamil (2001) and
6. Letters of the Portuguese Jesuits from Tamil Countryside, 1666-1668, (2001).
7. He has also co-edited (with KS Mathew) Indo-French Relations, (1999) and edited Trade and Globalisation: Europeans, Americans and Indians in the Bay of Bengal, 1511-1819 (2003);
8. Literature, Caste and Society: The Masks and Veils (2006),
9. Arangappa THiruvengadam Pillai Naatkurippa from 13.6.1767 to 29.12.1769, (Vol. III, in Tamil), 2006.
10. His publications also include a large number of articles on socio-economic history of Medieval South India, Maritime history of Early Modern India in various journals and edited volumes.
11. He won the best book prize for his book Muthu Vijaya Thiruvengadam Pillai Naatkurippu, 1794-1796, in 1999 (in Tamil which deals with diary writing in Tamil during the Eighteenth Century).
நூல் விமர்சனம்: முனைவர் க.சுபாஷிணி
[பகுதி-1]
வண்ண வண்ண ஆடைகளை விரும்பாத மனிதர்கள் தான் உண்டா? சென்ற மாதம் ஒரு சேலை வாங்கி இருப்போம். ஆனால் இன்று யாராவது அணிந்து இருக்கும் சேலை அழகாகக் கண்களைக் கவர்ந்தால் அதனையும் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழாமல் இல்லை.
பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் வகை வகையாக ஆடைகளை வாங்கி அணிந்து அழகு பார்ப்பதில் தனிக் கவனம் செலுத்தத் தவறுவது இல்லை. சிறு குழந்தைகளில் இருந்து வயதான மூத்தவர்கள் வரை எல்லோருக்குமே மனதைக் கவர்வது மனிதர்கள் நாம் அணிந்து கொள்கின்ற வகை வகையான ஆடைகள் தான்.
ஆடைகளை வாங்கி அணிகின்ற நம் ஒவ்வொருவருக்கும் ஆடை உற்பத்தியின் பின்னால் இருக்கும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றி அதிகம் கவனம் செல்வது இல்லை.
பொதுவாக எடுத்துக் கொண்டால் துணி நெ-நெய்வதற்குத் தேவையான நூலை உருவாக்கப் பருத்தி விவசாயம் அடிப்படையாக அமைகிறது.
அதன் பின்னர் பருத்திப் பஞ்சில் இருந்து நூல் உருவாக்கம் நூலுக்குச் சாயம் ஏற்றும் தொழில், துணி உருவாக்கம், துணியில் வண்ணம் தீட்டுவது, சாயத்தில் முக்குவது, துணிக்கு அச்சு செய்வது என்ற வகையில் முதல் கட்ட பணிகள் அமைகின்றன.
இப்படி உருவாக்கப்பட்ட துணிகளை வெவ்வேறு வகையான ஆடைகளாகத் தைப்பது அல்லது சேலை போல உருவாக்குவது என்பது அடுத்தக் கட்ட நடவடிக்கையாக அமைகிறது.
இதனை அடுத்து இப்படித் தனித்தனியாக உருவாக்கிய ஆடைகளை வணிகம் செய்வது என்பது நிகழ்கிறது. தமிழகம் மிக நீண்ட நெசவு பண்பாட்டைக் கொண்டு இருக்கிறது.
நமக்கு இன்று கிடைக்கின்ற ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட கிரேக்க வரலாற்று ஆசிரியர்களான தாலமி போன்றோரின் ஆவணக் குறிப்புகளும், ரோமானிய வர்த்தக குறிப்புகளும், இன்றைய எகிப்தின் அலெக்சாந்திரியா நகர வணிகர்களின் குறிப்புகளும் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலக் கட்டத்திலேயே தமிழக நிலத்தில் உருவாக்கப்பட்ட துணி வகைகள் ஐரோப்பியச் சந்தையில் புகழ்பெற்று பொருளாதார பலமிக்க வணிகப் பொருளாக இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
மிக நீண்ட காலமாக தமிழகத் தொழில் பண்பாட்டில் மிக முக்கிய அங்கம் வகித்த ஒரு தொழிலாக நெசவுத் தொழில் அமைகிறது. நெசவுத் தொழிலைச் சார்ந்து பல்வேறு தொழில்கள் தொடர்பு கொண்டு இருப்பதால் மிக விரிவான பொருளாதார தொடர்புடைய முக்கியத் தொழில் என்ற சிறப்பையும் நெசவுத்தொழில் பெறுகிறது.
ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட நெசவுத் தொழிலின் சிறப்பு பற்றி பேசும் நமக்குக் கடந்த சில நூற்றாண்டுகளில் இந்த நெசவுத் தொழில் எவ்வகையில் செயல் பட்டது என்பதைப் பற்றிய தகவல்கள் பேசப் படாமலேயே இருக்கின்றன என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.
கிபி 16-ஆம் நூற்றாண்டு வரலாற்றைப் பேசுகின்ற பெருவாரியான வரலாற்று ஆய்வாளர்கள் பொதுவாகப் பேசிச் செல்லும் ஆய்வுத் தளத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆய்வுத் தளத்தை மையமாகக் கொண்டு மிக விரிவான சான்றுகளுடன் முனைவர் எஸ்.ஜெசீல ஸ்டீபன் "நெசவாளர்களும் துணி வணிகர்களும் (கிபி 1502-1793)" என்ற நூலை ஆங்கிலத்தில் வழங்கி இருக்கின்றார்.
இதனை மறைந்த முன்னாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ந. அதியமான் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து இந்த நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்து உள்ளது.
முனைவர் ஜெயசீல ஸ்டீபன் மிக நீண்ட ஆய்வு அனுபவமும் பல்வேறு உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். இவரது ஒவ்வொரு நூலும் தமிழக வரலாற்றை மிக மிக நுணுக்கமான பார்வையுடன் மிக விரிவான பற்பல ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் திகழக்கூடியவை.
இவருக்குள்ள பன்மொழி திறன் இவரது ஆய்வுகளுக்குக் கூடுதல் பலம். போர்த்துக்கீசிய மொழி, லத்தீன், பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, ஆங்கில மொழி, தமிழ் மொழி ஆகியவற்றில் ஆழமான திறன் கொண்டவராக இவர் திகழ்கிறார்.
இத்தகைய மொழி ஆளுமை இருப்பதால் இவரது ஆய்வுகள் முதன்மைத் தரம் வாய்ந்த ஆவணங்களை அலசிப் பார்த்து அதிலிருந்து சான்றுகளைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்து இருக்கின்றது என்பதை மறுக்க இயலாது.
நெசவுத் தொழில் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்ததா..? இதற்கென்று ஒரு ஆய்வு நூல் தேவையா? எனச் சிலர் கேட்கலாம். அப்படிக் கேட்போருக்கு ஏராளமான பதில்களை முன்வைக்கிறது இந்த நூல்.
நூலாசிரியர் இந்த நூலுக்கு எடுத்துக் கொண்ட காலக் கட்டம் என்பது ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் காலக்கட்டம் மட்டுமே.
அதாவது கி.பி. 1502-ஆம் ஆண்டில் இருந்து 1793-ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் நெசவுத் தொழில் துணி வணிகர்களின் செயல்பாடுகள், சோழ மண்டல கடற்கரையோர வணிக முயற்சிகள் இவை ஏற்படுத்திய தாக்கங்கள், ஐரோப்பியர்களுடனான வணிகத் தொடர்புகள், கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் என்ற வகையில் இந்த நூல் அமைகிறது.
நூல் தமிழாக்க அறிமுக உரையுடன் தொடங்குகிறது. அதனை அடுத்து ஆங்கில நூலில் ஆசிரியர் வழங்கி இருக்கின்ற நன்றியுரை இடம்பெறுகிறது.
அதன்பிறகு நூலாசிரியர் பற்றிய ஒரு குறிப்பும் நூலில் பயன்படுத்தப்பட்ட சொல் குறுக்கங்கள் பட்டியலும் இடம் பெறுகின்றன. நூலை தொடங்குமுன் நூலின் மையக் கருத்திற்கான காட்சி அமைப்பு விளக்கப் படுகின்றது.
இதனைத் தொடர்ந்தார் போல கிபி. 1502-ஆம் ஆண்டிலிருந்து 1641-ஆம் ஆண்டுகளில் தமிழகக் கடற்கரை பகுதியிலிருந்து வளைகுடா இந்தோனேசியா தீவுக்கூட்டப் பகுதிகளுக்குப் போர்த்துக்கீசியர் நிகழ்த்திய துணி வணிகம் பற்றி ஒரு தனி அத்தியாயம் வழங்கப்பட்டு உள்ளது.
இக்காலக் கட்டத்தில் போர்த்துக்கீசியர்கள் தமிழகக் கடற்கரை துறைமுகப் பகுதிகளில் தங்கள் ஆளுமையைச் செலுத்திக் கொண்டிருந்த படியினால் தமிழக நெசவாளர்களின் துணிகளை அவர்கள் எவ்வகையில் பெற்று அதனை கிழக்காசிய நாடுகளில் வணிகம் செய்தார்கள் என்பதை இந்த அத்தியாயம் விரிவாகப் பேசுகிறது.
இதற்கு அடுத்தபடியாக வருகின்ற மூன்றாம் அத்தியாயம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்த அத்தியாயத்தின் தலைப்பு `செட்டியார் முதலியார் பிள்ளை மரக்காயர் வணிகர்கள் 16-18 ஆம் நூற்றாண்டுகளில் ஆசியாவில் மேற்கொண்ட துணி வணிகம் மற்றும் பொருள் நிலவியல் என்பதாகும்.
இந்தப் பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்ற ஆழமான செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்த ஒரு அத்தியாயத்திற்கு மட்டுமே நூலாசிரியர் 346 அடிக்குறிப்புச் சான்றுகளாக வழங்கி இருக்கின்றார் எனும் போது எத்தனைத் தகவல்களை இது உள்ளடக்கி இருக்கும் என்பதை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.
அதனை அடுத்து முடிவுரை வருகிறது. நூலில் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லடைவுகளும் அவற்றிற்கான விளக்கங்களும் இப்பகுதியில் வழங்கப்பட்டு உள்ளன. நூலுக்குப் பயன்பட்ட ஆய்வு நூல்களின் பட்டியல் அதனை அடுத்து இடம்பெறுகின்றது.
இறுதியாகப் புத்தகத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் நிலவரைப் படங்களும் தமிழகக் கடற்கரையோர முக்கிய வணிகத் தளங்களின் பெயர்களும் காட்டப்பட்டு உள்ளன.
மொத்தம் 220 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக இந்த நூல் அமைகிறது. நீண்ட காலமாகவே தமிழக சோழ மண்டல கடற்கரை ஐரோப்பியர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பகுதி.
இடைப்பட்ட காலத்தில் அரேபியர்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த தமிழகக் கடற்கரைப் பகுதியில் மீண்டும் வணிக முயற்சிகளை நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் மிகத் தீவிரமாகச் செயல்பட்ட காலமாக கி.பி. 15-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தைக் கூறலாம்.
வாஸ்கோட காமாவின் இந்தியாவிற்கான வருகை இதுவரை மறைந்திருந்த வணிகக் கதவுகளை மீண்டும் திறப்பதாக அமைந்தது. தொடர்ச்சியாகப் போர்த்துகீசிய வணிகர்கள் கோவா மற்றும் கேரளாவின் கடற்கரை பகுதி மட்டும் அல்லாது தமிழகக் கடற்கரைப் பகுதிகளிலும் தங்கள் வணிக முயற்சிகளைத் தொடங்கினர்.
போர்த்துக்கீசியர்களின் முயற்சி ஐரோப்பாவில் ஏனைய பிற நாடுகளில் வணிக ஆர்வத்தை எழுப்பியதால் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவை நோக்கி தங்கள் கவனத்தைச் செலுத்தத் தொடங்கின.
ஏற்கனவே இத்தாலி வணிகர்கள் மற்றும் அரேபிய வணிகர்கள் மூலமாகத் தென்னிந்திய வணிக வளம் பற்றி ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் அதிகமாகவே அறிந்திருந்தனர்.
ஆக, போர்த்துக்கீசியர்கள் அதற்கடுத்து டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை வணிகத்திற்குத் தகுந்த இடமாகக் காணத் தொடங்கி வணிக முயற்சிகளைக் கட்டமைக்கத் தொடங்கினர்.
இந்த வணிக முயற்சிகள் தான் இன்றைக்கு நமக்கு இந்தியாவைப் பற்றி மட்டும் அல்லாது மிகக் குறிப்பாகத் தென்னிந்தியாவின் நில வரைபடம் மற்றும் இலங்கையின் நில வரைபடம் தொடர்பான ஆவணங்கள் நமக்குக் கிடைப்பதற்கு மிக முக்கிய காரணங்களாக அமைகின்றன.
ஆங்கிலத்தில் cartography என்று சொல்லப் படுகின்ற ஒரு தனித் துறையை ஐரோப்பியர்கள் தங்கள் கடல் பயணங்களுக்காக மிக விரிவாகப் பயன்படுத்தினார்கள்.
இந்தியாவுடனான வணிகம் என்பது ரோமானிய காலம் தொடங்கி முக்கியத்துவம் பெற்றதால் அப்போதிருந்தே நில வரைபடங்கள் உருவாக்கம் என்பது ஐரோப்பிய வணிகர்களது முக்கியமான ஒரு செயல்பாடாகவே இருந்தது.
கி பி 16ம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் இன்றைய இலங்கை பற்றிய குறிப்பிடத்தக்க வரைபடங்கள் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டு உள்ளன.
இவை மட்டும் அல்ல. கேமரா மற்றும் வீடியோ பதிவு செய்யும் கருவிகள் இல்லாத அந்தக் காலக் கட்டத்தில் தாங்கள் காண்கின்ற காட்சிகளைத் துல்லியமாக ஓவியங்களாக வரைந்து அவற்றை ஆவணப்படுத்தி வைக்கும் செயலையும் ஐரோப்பிய வணிகர்களது குழுவில் இடம் பெற்ற வரலாற்று அறிஞர்களும் பாதிரிமார்களும், செயல்படுத்தினர்.
இத்தகைய நில வரைபடங்களும் ஓவியங்களும் தான் இன்றைக்கு நாம் கடந்த ஐநூறு ஆண்டுகால தமிழகத்தின் சமூக நிலையையும் புவியியல் சூழலையும் அறிந்து கொள்ள நமக்கு முதன்மை நிலை ஆவணங்களாகத் திகழ்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
(தொடரும்)
டாக்டர் சுபாஷினி
பின்னூட்டங்கள்:
தேவசேகரன் தனசேகரன்: சிறப்பான வரலாற்றை பறைசாற்றும் நூல். விரைவில் அடுத்த பகுதியை பதிவு செய்க. நன்றி அம்மா
தேவி கெடா கடாரம்: அருமையான தகவல்கள். நெசவாளர்கள் பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறது.உழவர்களின் அவலம் பற்றி அறிந்த அளவுக்கு ...நெசவு தொழிலை பற்றிய செய்தி அறிய வில்லை. அடுத்த தொடர் வரும் ஆவலில் நான்...
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நெசவாளர்களும் துணி வணிகர்களும்... இப்படி ஒரு நூல் இருப்பது பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்புகள் குறைவு.. இப்போது தெரிய வருகிறது. அறிமுகம் செய்த சகோதரி டாக்டர் சுபாஷினி அவர்களுக்கும்; நூலை எழுதிய பேராசிரியர் ஜெயசீலா ஸ்டீபன் அவர்களுக்கும்; மொழியாக்கம் செய்த அமரர் பேராசிரியர் அதியமான் அவர்களுக்கும் நம்முடைய நன்றி கலந்த வாழ்த்துகள்...
ராதா பச்சையப்பன்: நல்ல விளக்கம். நெசவாளர்களின், திறமையோடு அவர்களின் ஏழ்மையும்... மனம் கலங்குகிறது
👌
பதிலளிநீக்கு