18.01.2021
பதிவு செய்தவர்: தேவி கடாரம்
ஓர் அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு ஒரு விருந்திற்குப் போகிறார்கள்.
🔔 விருந்திற்கு முன்பாகத் தேநீர் வழங்கப் படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது.
🔔 அந்தச் சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதைப் பார்த்து, ’அழகான சீனக் கோப்பை இது. எவ்வாறு உடைந்தது’ என ஆதங்கமாகக் கேட்டார்.
🔔 "எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது" என அப்பா வருத்தமான குரலில் சொல்லவே...
🔔 நண்பர் உடைந்த பீங்கான்களை அள்ளிக் கொண்டு சென்றார்.
🔔 இதைக் கண்ட மகன் அப்பாவிடம் கேட்டான். ’உங்கள் கை கோப்பையில் படவே இல்லையே. பின் ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டீர்கள்?’.
🔔 "உண்மைதான். தேநீர் கோப்பையைக் கொண்டு வந்து வைத்தது நண்பரின் மகள்.
🔔 அவள் கவனமாக மேஜை மீது அதை வைக்கவில்லை. ஆகவே தவறி விழுந்து விட்டது.
🔔 இந்த உண்மையைச் சொன்னால் நண்பர் ஏற்றுக் கொள்வாரா? நிச்சயம் என் மீது சந்தேகப் படவே செய்வார்.
🔔 அதற்குப் பதிலாக செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டு விடுவதே சரி என நினைத்தேன்.
🔔 ஒருவேளை இந்த உண்மைக்கு நீ தான் சாட்சி என விளக்கிச் சொல்லி இருந்தால் அவர் மகளைக் கோபித்துக் கொண்டு இருப்பார்.
🔔 அதன் பிறகு அவரது மகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும்.
🔔 மெல்ல எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடும்.
🔔 "உறவுகள் உடை படாமல் காப்பாற்ற இப்படி சிறு பொய்கள் தேவைப் படவே செய்கின்றன".
🔔 அப்பாவின் முப்பது ஆண்டுகால அனுபவம் தான் அவரை இந்த முடிவு எடுக்க செய்து இருக்கிறது.
🔔 வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் இது போன்றது தானே!
🔔 இதற்கு மாறாகச் சிலர் தங்களது சுயநலத்திற்காகக் குடும்ப உறவுகளைச் சிதைத்துக் கொள்வதுடன் மற்றவர்களின் சந்தோஷத்தையும் கெடுத்து விடுகிறார்கள்.
🔔 உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது எளிது.
🔔 காப்பாற்றிக் கொள்வது எளிது அல்ல.
🔔 வீட்டுக் கொடுத்தலும்; புரிதலும்; அரவணைத்துப் போதலும்; அத்தியாவசமானவை.
🔔 நாம் யார் என்பதை நம் செயல்களே தீர்மானிக்கின்றன.
பின்னூட்டங்கள்:
ராதா பச்சையப்பன்: வாழ்க்கையின் தத்துவங்களில் ஓர் உண்மை. கதை அருமை👌 நன்றி.
மோகன் காசிநாதன்: அருமை. நன்றி.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மனதை உரசிச் செல்லும் கதை... அருமை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக