07 ஜனவரி 2021

சும்மா என்றால் என்ன? - மலாக்கா முனியாண்டி

07.01.2021

உலகில் 6800 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக கூறப் படுகின்றது. இவை அனைத்தையும் விட தமிழ் மொழி சிறப்புமிக்கது என்பது சும்மா சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

உலகின் மூத்த குடி எனப் பெயர் பெற்ற தமிழினம் பேசும் மொழி. மொழியால் இனம் பெருமை பெற்றது எனில் அது தமிழினமாகத் தான் இருக்க வேண்டும்.

உலகில் தோன்றி பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போய் விட்டன. ஆனால் தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து நிற்கின்றது. தன்னையும் தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டு இருக்கிறது.

நிச்சயம் நீங்கள் அசந்து போவீர்கள் – அது தான் தமிழ் மொழியின் சிறப்பு. ஏன் இந்த பீடிகை... தொடர்ந்து படியுங்கள் புரியும்.

*சும்மா*... சொல்லுவோம் தமிழின் சிறப்பை...
 
அது சரி... சும்மா என்றால் என்ன?

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த சும்மா.

பேச்சு வழக்குச் சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப் பட்டுள்ள ஒரு சொல் இது.

சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 பொருள்கள் உண்டு. வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்தச் சும்மா எனும் சொல் எடுத்துக்காட்டும்...

1. அமைதியாக - சும்மா (அமைதியாக) இருங்கள் – Quiet

2. களைப்பாறிக் கொண்டு - கொஞ்ச நேரம் சும்மா இருக்கின்றேன் - Leisurely

3. உண்மையில் - சும்மா சொல்லக் கூடாது அருமை - in fact

4. சும்மா (இலவசமாக) கிடைக்காது - Free of cost

5. பொய் - சும்மா கதை அளக்காதே - Lie

6. உபயோகமற்று - சும்மா தான் இருக்கின்றது எடுத்துக் கொள் - Without use

7. அடிக்கடி - சும்மா சும்மா சீண்டுகின்றான் இவன் - Very often

8. எப்போதும் - இவன் இப்படித்தான் சும்மா சொல்லுவான் - Always

9. தற்செயலாக - ஒன்றுமில்லை சும்மா சொல்கின்றேன் - Just

10. காலி - இந்த பெட்டி சும்மா தான் இருக்கின்றது - Empty

11. மறுபடியும் - சொன்னதையே சும்மா சொல்லாதே - Repeat

12. ஒன்றுமில்லாமல் - சும்மா (வெறும்கையோடு) போகக் கூடாது - Bare

13. சோம்பேறித் தனமாக - சும்மா தான் இருக்கின்றோம் - Lazily

14. நான் வெட்டியாக (சும்மா) ஏதாவது உளறுவேன் - idle

15. விளையாட்டிற்கு - எல்லாமே  சும்மா தான் சொன்னேன் - Just for fun

நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்தச் சும்மா என்கிற ஒரு சொல். நாம்  பயன்படுத்தும் இடத்தின் படியும்…. தொடரும் சொற்களின் படியும்...  பதினைந்து விதமான பொருள்களைக் கொடுக்கிறது என்றால் அது சும்மா இல்லை.

சும்மாவாவது சிந்தித்தீர்களா இதனை.. உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்ற தன்மை...

ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்.

இந்தச் சும்மா என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்குச் சும்மா பிடித்து இருந்தால் சும்மா ஒரு பதிவு பண்ணுங்கள்... சும்மா பற்றி உங்கள் நண்பர்கள் குடுப்பத்தார் உறவினர்கள் தெரிந்து கொள்ளட்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக