08 ஜனவரி 2021

கண்ணதாசனும் ஆங்கிலப் புலமையும் - ஜெயஸ்ரீ கண்ணன்

 08.01.2021

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர் திரு.வி.பி. ராமன் என்ற வழக்கறிஞர். மிகச் சிறந்த திறமைசாலி. தன்னுடைய சில வழக்குகள் விசயமாக அவரைச் சந்திக்க செல்வார் கவியரசு கண்ணதாசன்.

வழக்கறிஞரின் மனைவி நன்கு படித்தவர். ஆங்கில அறிவு உள்ளவர். ஒரு முறை கவிஞர் வழக்கறிஞரைச் சந்திக்க சென்ற போது கதவு மூடி இருந்தது.

யாரோ வெளியில் நிற்பதை அறிந்து "ஹூ இஸ் தட்" (Who is that) என்று ஆங்கிலத்தில் கேட்டார் வக்கீலின் மனைவி .

"என் அவுட் ஸ்டாண்டிங் பொயிட் ஈஸ் ஸ்டாண்டிங் அவுட் (An outstanding poet is Standing Out) என்று பதில் கொடுத்தார் கவிஞர் கண்ணதாசன்.

வெளியில் வந்த வக்கீல் மனைவி, "பரவாயில்லையே... தமிழில் தான் கவிதை எழுதுவீர்கள் என்று நினைத்தேன். ஆங்கிலத்திலும் புலமை உள்ளதே" என்று வியந்தார்.

அப்போது அவர் தான் படித்த ஆங்கில கவிதையின் இரண்டு வரிகள் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கவியரசரிடம் அதைக் கூறினார்.

அந்தக் கவிதையில், போரில் இருந்து திரும்பிய இராணுவ வீரன் போர்க் களத்தையே நினைத்து... நினைத்து... தூங்காமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்.

தன் கணவனைப் படுக்கக் சொல்லிவிட்டு இந்த வரிகளைக் கூறினாராம் இராணுவ வீரனின் மனைவி...

"சிலீப் யுவர் ஐஸ்.... ரெஸ்ட் யுவர் ஹார்ட்"
(Sleep your eyes, Rest your heart)

என்பதே அந்த வரிகள்.

கவிஞரின் மனதில் அந்த வரிகள் மிக ஆழமாகப் பதிந்தன. அந்த நேரத்தில் ஒரு படத்திற்குப் பாடல் ஒன்று எழுத வேண்டி வந்தது.

அவரது மனதில் பதிந்த அந்த வரிகள் அன்றைய படத்தின் சூழலுக்குத் தக்கவாறு இருந்ததால் அப்படியே பாடலாக வெளிப்பட்டன. அந்தப் பாடல் தான் ஆலயமணி படத்தில்  ஜானகி பாடும்...

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே....
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே...
 


அனைவரது நெஞ்சிலும் கண்ணதாசன் புகழ் என்றும் அழியாது.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக