24.01.2021
பதிவு செய்தவர்: தனசேகரன் தேவநாதன்
தாய் தமிழ்ச் சொந்தங்கள் கண்முன்னே இறந்தனர் துடித்து!
அதனைக் கண்ட தமிழர் உள்ளமோ வெடித்து!
இச்சோக அவல நிலையை நினைத்து!
மக்களெல்லாம் மழை மழையாய் கண்ணீரை வடித்து!
சுயம், பயம் என்ற மதிலை இடித்து!
மெத்தனத்தையும் அலட்சியத்தையும் விட்டொழித்து!
எழுந்தனர் உறக்கத்திலிருந்து விழித்து!
அறிவுபூர்வமான திட்டங்கள் பல வகுத்து!
அடுக்கடுக்காய் ஒன்றன் பின் ஒன்றாக அதைத் தொகுத்து!
மாற்றப்பட வேண்டும் ஈழத்தமிழரின் தலையெழுத்து!
அதையே இலக்காய் கொண்டனர் உலகத்தமிழர் அடுத்து!
அதற்கு உள்ளத்தில் உரமேற்றினர் சபதம் எடுத்து!
நம்புங்கள் அதற்கு கைகொடுக்கும் நம் தமிழ் எழுத்து!
என்று எழுதுகிறேன் மங்களமாய் ஈழம் மலருமென முடித்து!
இத்தனைத் தீமையை,
இனி எத்தனை காலம்?
ஒரு பித்தனைப் போன்று,
சகிக்க வேண்டும் என் புத்தனே?
ஆக்கம்,
பா.சந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக