16 ஜனவரி 2021

ஜாசின் தமிழ்ப்பள்ளி மாணவி தமிழருவி விஜயகுமாரன்

14.01.2021

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் வரலாறு படைத்த பள்ளிகளில் ஜாசின் தமிழ்ப்பள்ளியும் ஒன்றாகும். எண்ணற்ற கல்விமான்களை உருவாக்கிய பள்ளி எனும் பெருமைக்கு உரிய பள்ளி. இந்தப் பள்ளியில் பயின்ற மாணவி தமிழருவி விஜயகுமாரன்.


தமிழ் உணர்வுகளின் புகலிடம் என்று தாராளமாகச் சொல்லலாம். இவரின் தலைவாசகம்: தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. மூச்சுக்கு மூச்சு தமிழைச் சுவாசிக்கும் அழகிய மகள். இவரின் பேச்சைக் கேட்டுப் பாருங்கள். தமிழ் மணக்கிறது.


இவரின் மேல்படிப்புக் கூடங்கள்:

1. ஜாசின் தமிழ்ப்பள்ளி
2. SMK Iskandar Shah Jasin Melaka
3. Kolej Matrikulasi Pahang (KMPh)
4. University of Malaya (2015 to 2020) MBBS

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும்  அளந்திடும்
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!

முத்துக்கிருஷ்ணன்: ஜாசின் தமிழ்ப் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து உள்ளேன். என்னிடம் பயின்ற மாணவர்கள் பலர் ஆசிரியர்கள்; எழுத்தாளர்கள்; மருத்துவர்கள்; கல்விமான்கள்; இன்னும் பற்பல துறைகளில் பயணிக்கின்றனர்.

இந்தப் பள்ளியில் தமிழ் உணர்வுகளை ஆழமாய் விதைத்தவர்களில் அடியேனும் ஒருவன்... இந்த அழகிய மகளுக்கு நம்முடைய அழகிய தமிழில் அழகிய வணக்கம்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக