19 ஜனவரி 2021

இயற்கையை ரசிப்போம்... இயற்கையை நேசிப்போம்

18.01.2021

இயற்கையை நேசிப்பது மட்டும் அல்ல. அதைப் பாதுகாப்பதும் அவசியம். மறந்துவிட வேண்டாம். அது நம் கடமை மட்டும் அல்ல. அது மனிதநேயம். அதில் மனிதமும் இணைகின்றது.

காடுகள், மேடுகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கடல்கள், மலைகள், மண் வளங்கள், மேகத் துகள்கள், நுண்ணியிரிகள்; ஏன் ஒவ்வொரு மழைத் துளியும்கூட இயற்கையின் நன்கொடைகள்தான்.

இவற்றில் ஒன்றை இழந்தும் கூட மனிதர்களால் வாழவே முடியாது. எல்லாவற்றையும் அழித்துவிட்டு எவரோடு, எதனோடு வாழப் போகிறார்களோ தெரியவில்லை. இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உங்கள் தலைமுறைக்குச் சொத்து சேர்ப்பதைப் போல, இயற்கையையும் பாதுகாத்து சேர்த்து வையுங்கள். இயற்கை வளங்களைப் பற்றி விழிப்பு உணர்வை ஏற்படுத்துங்கள். இயற்கையைப் பாதுகாக்க இயன்றதைச் செய்யுங்கள்.

உயிர்கள் படைக்கப்பட்ட போதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்த்தே படைக்கப்பட்டு உள்ளன. இயற்கை வளங்களுடன் அத்தனை உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாகவே நடைபெற்று வந்தது.

மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். இயற்கை வளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். காலம் வேகமாக மாறியது. தனிமனித உடைமைப் போக்குகள் உருவாகின. அறிவியலின் ஆதிக்கம் பெருகியது.

அதன் விளைவு: மனிதருக்கு மட்டுமே பூமி என்ற நிலை உருவானது. அதுவும் மாறி, அறிவியல் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு மட்டுமே இயற்கை வளம் யாவும் சொந்தம் என்ற நிலையும் உருவாகி உள்ளது.

மனிதர்களின் பேராசையால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டன. அதனால் உயிரினங்கள் எல்லாமே பாதிப்பு அடைந்து வருகின்றன.

நீர், நிலம், ஆகாயம், காற்று என நான்கு பூதங்களும் மாசு அடைந்து விட்டன. இந்தப் பூமி வாழ முடியாத இடமாக மாறி விடுமோ என்கிற ஒரு நிலையும் உருவாகி வருகிறது.

வனங்கள் அழிந்து, நதிகள் வறண்டு, மலைகள் மறைந்து, கடல் நீர் உயர்ந்து போன நிலையில்... எதிர்காலத் தலைமுறைகளுக்கு எதைச் சீதனமாகக் கொடுத்துச் செல்லப் போகிறோம். தெரியவில்லை.





4 கருத்துகள்: