26.12.2020
டிசம்பர் 26-ஆம் தேதி சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மா சே துங் பிறந்த தினம் (டிசம்பர் 26, 1893).
இவருக்கு 18 வயது இருக்கும் போது சீனா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அங்கு நிலையான, ஒற்றுமையான அரசு ஏற்படவில்லை. இந்த நிலையில் இடதுசாரி அரசியல் கொள்கைகள் இவரைக் கவர்ந்தன.
1920-இல் கொள்கைப் பற்றுமிக்க பொதுவுடைமையாளர் ஆனார். விரைவில் பொதுவுடைமைக் கட்சியின் உயர் அதிகாரக் குழு உறுப்பினர் ஆனார்.
ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி படிப்படியாக முன்னேறியது. அந்தக் காலக் கட்டத்தில் ஆட்சியை எதிர்த்து தனது ஆதரவாளர்களுடன் நீண்ட நடைப் பயணம் மேற்கொண்டார். 8 ஆயிரம் மைல் தூரத்தைக் கடந்தார்.
1935-இல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பொதுவுடைமைக் கட்சி மிகுந்த வளர்ச்சி பெற்றது. அரசை எதிர்த்து நீண்ட நெடிய போர் புரிந்தார். கட்சி வெற்றி பெற்றது.
1949-இல் சீனா குடியரசு நாடானது. மக்கள் சீனக் குடியரசின் முதல் அதிபராக மா சே துங் பதவி ஏற்றார். சீன குடியரசு நாடு நவீன மயமானது.
பல நூற்றாண்டு கால அந்நிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு, 20-ஆம் நூற்றாண்டில் சீனா மகத்தான வளர்ச்சி கண்டது. சீனாவில் பெரும் தொழில் புரட்சியும், வேளாண் புரட்சியும் நிகழ்த்திய மா சே துங் ஒரு புரட்சிகரத் தலைவர் மட்டும் அல்ல.
தற்போதைய சீன வல்லரசின் சிற்பியாகவும் போற்றப் படுகிறார். இவரின் கொள்கைகள் மாவோயிசம் என்று புகழ்பெற்றன. 83-வது வயதில் காலமானார்.
உலக கம்யூனிச வரலாற்றில் மார்க்ஸ், எங்க்லஸ், லெனின் இவர்களுடன் மா சே துங் பெயரும் இடம் பெறுகிறது.
நன்றி ஐயா
பதிலளிநீக்கு