12 ஜனவரி 2021

விளைச்சல் - சத்யா பிரான்சிஸ்

11.01.2021

பதிவு செய்தவர்: கரு. ராஜா

ஊரெல்லாம் நதி
நடன மங்கையாக
வளைந்தாடிச் செல்கிறது
வயல்வெளி எங்கும்
இளங்கன்னியாக
நாணத்துடன் கதிர்கள்
தலை சாய்ந்து கிடக்கின்றன..!



வரப்பைச் சுற்றி
வேலி அமைத்தது போல்
பழ மரங்கள்
கருத்தரித்தப் பெண் போல
கனிகளைத் தாங்கி நிற்கின்றன..!

கண்மாய் நீர்
வயல்களின் தாகம் தீர்க்க
தாயன்புபோல்
பெருக்கெடுத்து ஓடுகிறது..!

விலை கதிரோடு
ஒட்டுணியாக வளர்ந்த
கோரைப் புற்கள்
தலை அறுபடும் நாளுக்கு
வருத்தமுடன் காத்திருக்கின்றன..!

விளைச்சல் கண்ட
வயல் வெளியைக்
கதிரவன் ஒளி பாய்ச்ச
காற்று தாலாட்ட
சிட்டுக்குருவிகள் இன்னிசைக்க
மழைத்துளிகள் தூவ
விவசாயி மனது சிலிர்க்கிறது..!


தனசேகரன் தேவநாதன்: விவசாயத்தை அதிகாலையிலேயே ஆராதனை செய்து விட்டீர்...

ராதா பச்சையப்பன்: வயல்வெளி எங்கும் இளங்கன்னியாக நாணத்துடன் கதிர்கள் தலைச் சாய்ந்து கிடைக்கின்றன... நல்ல கவிதை நயம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக