17 ஜனவரி 2021

ஜாசின் தமிழ்ப்பள்ளி ரேனுஷா ஆனந்த்

17.01.2021

மலாக்கா ஜாசின் தமிழ்ப்பள்ளியில் பயின்ற ரேனுஷா ஆனந்த் தற்சமயம் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வருகிறார். அவரின் திறமைகளை அடையாளம் காட்டியது ஜாசின் தமிழ்ப்பள்ளி என்று புகழாரம் செய்கிறார்.

தமிழ்ப் பள்ளிகளைத் தவிர்த்து விட்டு மற்ற மற்ற மொழிப் பள்ளிகளில் நம் இன மாணவர்கள் அதிகம் சேர்த்த காலம் மலை ஏறி வருகிறது. இப்போது தமிழ்ப் பள்ளிகளில் நம் மாணவர்களைச் சேர்க்கும் காலம் கரை சேர்ந்து வருகிறது.

தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் அதே வேளையில் தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்றுவதும் நம் கடமையாகும். தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

தமிழ்ப் பள்ளியே நம் தேர்வாக அமையட்டும் என்ற உயரிய சிந்தனையில் இந்தியப் பெற்றோர்கள் ஆக்ககரமாகச் செயல்பட வேண்டும். மாணவர்களின் வெற்றிக்கு பாடுபடும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த வேளையில் நம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு. அதுவே மலேசியத் தமிழர்களின் தேர்வு. மாணவி ரேனுஷா ஆனந்த் அவர்களுக்கு மலேசியம் புலனம் தம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தனசேகரன் தேவநாதன்: வாழ்க வளர்க... தமிழோடு உயர்வோம்

வெங்கடேசன்: தங்க மகளுக்கு மென்மேலும் வெற்றிகள் குவியட்டும் இறைவன் அருளால்... வாழ்க வளமுடன்...

ரஞ்சன் கங்கார் பூலாய்: தமிழ்ப்பள்ளிக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் மாணவிக்கு... வாழ்த்துகள்...

கரு ராஜா:
வாழ்த்துகள்

ராதா பச்சையப்பன்:
வாழ்த்துகள்

பாரதிதாசன் சித்தியவான்: வாழ்த்துகள்


1 கருத்து: