05.02.2021
மலேசியாவில் கல்வித் துறையில் எல்லோருக்கும் மிக அறிமுகமான கல்வியாளர் குமணன் கணேசன். இவர் கெடா, சுங்கைப் பட்டாணியைச் சேர்ந்தவர். யூ.பி.எஸ்.ஆர். ஆங்கிலப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
கடந்த 20 ஆண்டுகளாக ‘தி எடுகேட்டர்” (THE EDUCATOR) எனும் கல்வி இதழ் வழி, மலேசியத் தமிழ் மாணவர்கள் ஆங்கில மொழியில் புலமைப் பெறவும், தேர்வில் சிறப்பான புள்ளிகளைப் பெறவும் வழிகாட்டியாக இயங்கி வருகின்றார்.
மலேசியத் தமிழ் மாணவர்களும் ஆசிரியர்களும் பயன் பெறும் நோக்கத்தில் ஒரு வலையொளியை உருவாக்கி சிறப்பாகச் செயலற்றி வருகிறார். கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு உகந்த பயிற்றுத் துணைப் பொருள்களையும் உருவாக்கி ஒளியேற்றி வருகிறார்.
அதோடு நாடு முழுமையிலும் நேரடியாகச் சென்று இலவசமாக தமிழ்ப் பயிற்சிப் பட்டறை, வழிகாட்டி கருத்தரங்கு போன்றவற்றை தனி நபராகவும், தனியார் மற்றும் சமூக இயக்கங்களுடன் சேர்ந்து வழங்கி வருகிறார். வாழ்த்துகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக