19 ஜனவரி 2021

பார்த்தேன் படித்தேன் பாரமானேன் - ஆதி சேகர், கோலக்கிள்ளான்

16.01.2021

மலேசியம் புலனம்
வழி 130 பேர்களை இணைத்து
பல பகிர்வுகளை
கடந்து நல் நெருக்கத்தை அன்பர்களிடம் ஏற்படுத்தி.....
தைரியமாக கருத்துக்களையும்...

சுதந்திரமாகத் தமிழில் தட்டச்சு செய்து
தமிழ் தட்டச்சு வேக
திறமைக்கும்...
தமிழ் மொழியின்
ஆளுமைக்கும்...

சத்தமில்லாமல்
வேலை செய்து...
வேவுபார்த்து...

தரம் கொண்ட பகிர்வுக்கு
ஊக்கம் தந்து...
நிறைகுடம் இல்லாத...

பகிர்வுக்கு நாசுக்காக
தண்ணீரை நிரைப்பி
மீண்டும் புலனத்தில்
என்னை போல்
பகிரும் அன்பர்களுக்கு

கருத்துக்கும்...
பகிர்வுகளுக்கும்...
பாராட்டி...

தமிழ்மொழியோடு எங்களைக் கைகொடுத்து

தூக்கி 130 பேர்களில் நன்கு தமிழ் புலமை கொண்டவர்கள்

நிறைய பேர்கள் இருப்பினும்...

என்னைப் போல் உள்ளவர்களையும்
அடையாளம் கண்டு
தமிழ் எழுத்துறைக்கு
இந்த புலனம் வழியாக
வலி இல்லாம் இழுத்து...

இன்னும் ஒருபடி
மேல் சென்று...
திருத்தி வளைதளத்தில் பதிவு செய்து...

எங்கள் பெயர்களையும்
தண்ணீரில் புதியதாக இருக்கும் தாமரை மலர்கள் போல்...
எங்களையும்

சத்தம் இல்லாமல்
தாய் தமிழ் மொழிக்கு பட்டறையை கட்டும்

ஒருங்கிணைப்பாளர்... என்ற கட்டமைப்போடு
சத்தம் இல்லாமல் கை அடக்கத்திலேயே
சிறந்த...
ஆளுமை மிக்க...
நிர்வாகிகள் கொண்டு
கலந்து பேசி...
தமிழுக்கு...
தமிழ் மொழியோடு
எங்களை வழி நடத்தும்
130 பேர்கள் கொண்ட அன்பர்களில்...

வெறும் 13 பேர்களே
பொங்கள் வாழ்த்து கூறியது என்று
ஆய்வில் குறிப்பிட்டது...
மனம்...
கனக்கிறது... 😢

அன்பர்களே....!
முத்து ஐயாவோடு...
மதிப்புக்குரிய புலனம்
நிர்வாகிகள் கொண்டு
நீங்களும் சேர்ந்து
செதுக்கினால்....
மலேசியம் புலனம்
என்ற தமிழ் புலனம்...
நீங்கள் எல்லோராலும்

செதுக்கிய பல சிலைகள்...
கொண்ட ஓர் ஆலயம்...!

தமிழில்
தட்டச்சில் தனித் தன்மை
வளர்த்து உங்களிடமும்
அன்றாடம் பேசும்.

ஊக்கம் தாருங்கள்...
எங்களுக்குள் தமிழ்
வளர்கிறது என்றால்
நீங்கள் எல்லோரும் சேர்ந்து ...
ஊற்றும் தாய் தமிழ் என்ற தண்ணீரே...

தவறு இருப்பின்
பொருத்தளுக....!
🌹🙏🌹

இரா. ஆதிசேகர்.
கோலக்கிள்ளான்.



 

2 கருத்துகள்: