14.01.2021
பதிவு செய்தவர்: சுங்கை சிப்புட், ஜெயராமன்
உழவரெல்லாம் ஒன்றிணைந்து உள்ளம் பொங்குதே
உழைக்கின்ற உழைப்பாளர் உலகை பொங்குதே
உடை நெய்யும் நெசவாளர் நெஞ்சம் பொங்குதே
பாடுபடும் பாட்டாளி வயிலும் பொங்குதே
களிமண்ணில் பானை செய்வோர் இதயம் பொங்குதே
தொழிலாளர் துயரன்று இன்பம் பொங்குதே
தெருவெங்கும் தனித்தமிழும் தனித்துப் பொங்குதே
தமிழர்காள் இல்லமெல்லாம் பொங்கல் செய்வீரே
மஞ்சளதின் மணமெல்லாம் மருந்தாய் பொங்குதே
மங்கையர்கள் மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்குதே
இஞ்சிமணம் இல்லத்தில் இணைந்து பொங்குதே
ஈடற்ற பரங்கிக்காய் சுவையும் பொங்குதே
நெஞ்சமெல்லாம் புத்தாடை பொலிவும் பொங்குதே
நெல்சோறு புதுப்பானை தன்னில் பொங்குதே
கொஞ்சுதமிழ் குவலையத்தார் வாயில் பொங்குதே
பஞ்சமின்றி தைப்பொங்கல் பொங்குவீரே!
இலக்கியா ஜெயராமன்,
சுங்கை சிப்புட்
பேராக்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக