17.01.2021
பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ
ஒரு நாட்டு மன்னன் தன் அரன்மனையில் நாட்டியம் ஆட வந்த பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய ஆசைப் பட்டான்.
அப்பெண்னோ மன்னா நாங்கள் நடனம் ஆடுவது எங்கள் குலதொழில் வேண்டாம்.... மன்னா நாங்கள் ஆண்டவனுக்கு தொண்டு செய்பவர்கள் என்றாள்.
மன்னவனோ ஆண்டவனும் அரசனும் ஒன்று தான். நீ என் இச்சைக்கு இணங்கத்தான் வேண்டும்... வா நான் இந்த நாட்டிற்கே உன்னை அரசி ஆக்குகிறேன் என்றான்.
அப்பெண் எவ்வளவோ வாதாடியும் விடவில்லை மன்னனிடம் கடைசியில் ஒப்புக் கொண்டாள் அப்பெண்!
சரி மன்னா நாளை தாங்கள் என் வீட்டிற்கு வாருங்கள் விருந்து வைக்கிறேன், அமுதுண்டு பிறகு சல்லாபிக்கலாம் என்றாள்.
மன்னனும் சென்றான். அப்பெண் மன்னனுக்கு 16 வகை கலரில் இனிப்பு வழங்கினாள்.
மன்னன் எனக்குச் சாப்பிட பொறுமை இல்லை, நீயே ஊட்டி விடு என்று கூறினான்.
அப்பெண்ணும் ஊட்டி விட்டாள். மன்னன் சுவைத்தான். விருந்து முடிந்தது.
மன்னனிடம் கேட்டாள்; "மன்னா 16 வகையான இனிப்பு சுவைத்தீர்களே ஒவ்வொன்றின் சுவை எப்படி இருந்தது மன்னா?"
மன்னன் "நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தான்" என்றான்.
பெண்; "மன்னா நாங்களும் அப்படிதான் பெண்கள் நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தானே" என்றாள்.
"தாயே என் அறிவுக்கண் திறந்தவளே" என்றான் மன்னன்.
இது கதையாக இருந்தாலும் உண்மை அதுதானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக