13 ஜனவரி 2021

மலாயா தமிழர்களின் வாழ்வியல் முட்டுக்கட்டை - ஆதி சேகர், கோலாகிள்ளான்

12.01.2021

ஒரு காலத்தில் ஆசியா கண்டத்தின் சிங்கம். அமெரிக்காவுக்குத் தலை வணங்காமுடி. மலேசியா தொழில்நுட்பத்தின் தந்தை. புதிய மலேசியாவின் தந்தை. சாதனைத் தந்தை. மண்ணின் மைந்தர்களின் புதிய பரிமாற்றக் கடவுள் என்று எல்லாம் பெயர் எடுத்து; கண்ணீர் வடித்து; அம்மு நோ மாநாட்டில் ஒப்பாரி எல்லாம் வைத்து; நடிக்காத நாடகம் எல்லாம் நடித்து; நடிகர் திலகத்தின் செவாலியர் விருதையே விஞ்சி மிஞ்சிப் பேர் எடுத்தவர்.

மொத்த மேம்பாட்டியான் "காண்ரேட்" எல்லாம் கைக்குள் போட்டுக் கொண்டு...  கைகூலிகளுக்கு "டிப்சாக’ பல காண்ரேட்டுகளைக் கொடுத்து... மண்ணின் மைந்த இனத்தவர்களிடையே இளையவர்கள் முதல் வயதானவர்கள் வரை இனம்... மதம்... அடிப்படையில் பேதமாக்கி... அரசியலோடு அந்த இனத்தவர்கள் நகர வேண்டும் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிச் சொல்லி...

தமிழர்களையும்... சீனர்களையும்... அந்தச் சமுகத்தினரிடம் இருந்து பிரித்து...  நயவஞ்சகமாகத் தமிழர்கள் மீது பிள்ளையார் சுழி போட்டு... தமிழர் இனத்தைச் சின்னச் சின்னமாய் அழித்து... இந்த நாட்டில் தமிழர்களின் வாழ்வியல் முன்னேற்றப் பாதைக்குப் பெரிய முட்டுக் கட்டையாக இருக்கும் படி எல்லாத் துறைகளிலும்...

அழகாக... சத்தம் இல்லாமல்... தண்ணீருக்குள் நீந்திச் செல்லும் முதலை போல் தடை செய்து... சீனர்களின் வெளிப்படை வியபாரம்... மேம்பாட்டு நிர்வாகப் பணிகள்... தொழில் துறைகளில் முட்டுக் கட்டைகளைப் போட்டு... அவர்களையும் முடக்கி... அவர்கள் செய்யும் தொழில் திறமைகளில்...

மைந்தர் இனத்தவர்களைக் காலத்தின் கட்டாயமாகச் செயல்பட வைத்து இனம்... மதம்... அடிப்படையில் உட்படுத்திச் செய்ய வேண்டும் என்று பல அம்முனோ மாநாட்டில் மறைமுகமாக வற்புறுத்தி அவர்களுக்குப் பல சலுகைகள்... அவர்களுக்கு என்றே...

உதவித் திட்டமாகத் திட்டம் தீட்டி... அதில் பல விபரீதங்கள் நடந்தாலும் அதை அரசியல் ரீதியாக கையாலாகாத முயற்சிக்கு வழிவகுத்து... தற்காத்து... மீண்டும்... மீண்டும்... அவர்களுக்கு வாய்ப்பு தந்து தூக்கி... தூக்கி... ஊட்டி... ஊட்டி...

ஒரு காலத்தில் தமிழர்கள் இல்லையேல்; தார் ரோடு இல்லை என்ற சூழ்நிலையை மாற்றி; இன்று அந்த இனத்தவர் "காண்ரேட்" இல்லையேல் "மானா ஆடா ஜாலான்.." என்று பேசும் அளவுக்கு... பல துறைகளில் நம் இனத்திற்க்கும் சீன இனத்திற்கும் அழுத்தம் தந்து....

தூக்கிவிட்ட ஐயா தூண் அவர்களை... இன்று... அவரின் இனமே பிரார்த்தனை செய்கிறது போய்யானு... உன் காலம் முடியட்டும் என்று... பார்த்தீர்களா....!

இவர் கெட்டவராகவே இருக்கட்டும்... ஆனால் இவர் இனத்துக்கு இவர் எங்கே...? நம் இனத்தின் சாதனைத் தலைவர் எங்கே?

இவர் இவ்வளவும் செய்தும்... அரசியல் ரீதியில் இவரின் இனமே தூற்றுகிறது. ஆனால் அந்த இனத்தின் வாழ்வியல் முன்னேற்றத்தில் இவர்தான் ஏணிப்படி.

நம் இனம் சொந்த உணர்வோடு... உத்வேகத்தோடு... எழ இருந்த நேரத்தில்...

தலைவர்... இனத்துக்குக் கை கொடுத்து தூக்க வழி இருந்தும்... தூக்காமல் குழியை மட்டும் ஆழமாக... எழ முடியாமல் அளவுக்குத் தோண்டி... இன்று அமைதியாக இருக்கிறார்.

நம்மவர்களின் பெருந்தன்மைக்கு எல்லையே இல்லை. நம்பிக்கை இருக்கிறது நம்மவர்களுக்கு... எந்தத் தடைகள் போட்டாலும் தன் நம்பிக்கையில் முன்னேற முடியும் என்று... இது தான் காலத்தின் கோலம்.

எது எப்படியோ மீண்டும் பல இனம் கொண்ட அரசியல் கட்டமைப்பு திரும்புமா என்பது கொஞ்சம் கடினம் தான் இந்த நாட்டில்.

ஒரே வாய்ப்பு பல்லின சமுதாயத்தோடு ஒன்றிப் போகும் தலைவரையும்; கட்சியையும்; மக்கள் வரும் தேர்தலில் அடையாளம் கண்டு பெரும் ஆதரவோடு பல இடங்களில் வெல்ல வைக்க வேண்டும். முக்கியமாக நாடாளுமன்ற நாற்காலி எண்ணிக்கையில் கூடுதல் வேண்டும்.

தாய்க் கட்சிக்கு லாபம்... தமிழர்கள் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளும். நம் இனம் ஆதரிக்கவில்லை என்று... இதற்கு மாற்றம்... நம் இனத்தினரிடையே ஒரு வழி என்றால்...

அக்கரை இரத்த உறவுகளின் ஒற்றுமையோடு... கைகோர்த்து... ஒரே ஓசையோடு ஒரே இன மக்கள் தமிழர்கள் என்று புதிய பரிமாற்றத்தோடு மாற்றம் கண்டால்... இங்கும் மாற்றம் காணும் என்பது என் யூகம். காரணம்...

இந்தியா தமிழ்நாட்டை முன்வைத்தே அதே பாவனையிலேயே நம் அரசியல் தலைவர்களின் நகர்வுகள் இருப்பதாக என் உணர்வு.

தமிழுக்கும்... இந்நாட்டின் தமிழர்களின் உரிமைக்கும்... நமக்காக விடாப்பிடியாக அரசாங்கத்திடம் குரல் கொடுத்து இருந்தால் நமக்கு இப்போது உள்ள சூழ்நிலை வந்து இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து.

இவ்வளவு வரலாற்றுச் சான்றுகளை இந்த நாட்டில் நம் தமிழ் இனத்திற்காக முயற்சி எடுத்து எழுதிய பல எழுத்தாளர்கள் இல்லை என்றால் இப்போது உள்ளவர்கள் பல பேருக்கு... தெரியுமோ... தெரியாதோ... எழுத்தாளர்களின் எழுத்துக்கள் கண்ணீர் சிந்தி கூறிய வரலாற்று உண்மைக் கூற்றுகள் தலைவர்களுக்குத் தெரியுமோ... தெரியாதோ...

நம்மில் பல பேருக்கு தெரியாமலே போய் இருக்கும். இவ்வேளையில் ஐயா முத்து அவர்களுக்கும் இதர வரலாற்று படைபாளிகளுக்கும் நாம் நன்றியை இரு கரம் கூப்பி கூறி ஆகத் தான் வேண்டும்.

நாம் பாவப்பட்ட இனமாக... இந்த நாட்டில் தலைவர்கள் என்ற தவக்களையை நம்பி மோசம் போனோம். வரும் காலம் தான் புதிய பொங்கல் மாதத்திற்குப் பிறகு பதில் கூறவேண்டும்.

இது என் தனிப்பட்ட கருத்து. பிழை இருப்பின் பொருத்து அருள்க... ஆதி. 🙏 🙏

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக