20.01.2021
பதிவு செய்தவர்: தேவி கடாரம்
இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்கிறான். அவன் மனதில் அணு அளவுகூட தாம் குணம் அடைவோம் என்ற நம்பிக்கை இல்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டுவிட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.
ஆனால் அவனைப் பேணும் செவிலிப் பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப் படுத்திக் கொண்டே இருக்கிறாள். அவனது அறையின் வெளியில் ஒரு மரம் தனது இலைகளைத் தினமும் உதிர்த்துக் கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது.
அதைச் சுட்டிக் காட்டி அதைப் போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான். மரத்தின் ஓர் இலையைத் தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன. அந்தக் கடைசி இலை விழும்போது தானும் இறந்து விடுவோம் என அஞ்சுகிறான். சோகத்தின் பிள்ளையாய் மாறிக் கொண்டே வருகிறான்.
செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை. நாளைக் காலை கடைசி இலை உதிரும் போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான்.
பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை! இதைக் கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது. நம்பிக்கை விதை முளைவிட்டது. அந்த ஒற்றை இலைபோல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்து விட்டான்.
மருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணம் அடைந்தான்.
அவன் வீட்டுக்குச் செல்லும் நாள் வந்தது. செவிலி வந்து அவனை மரத்தின் அருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையைப் பறித்து அவனிடம் தந்தாள். அது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தெரிகிறது.
அதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்கு முன் ஓர் ஓவியனைக் கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தி இருந்தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது.
பார்த்தீர்களா! நம்பிக்கை என்னென்ன செய்கிறது என்று! திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் இருந்தால்; உடல் என்ன உலகையே வென்று காட்டலாம்.
இதை உண்மை என்று நம்புங்கள். உடலும் உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவை. அங்கே சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலே போதும். செடிகளும், பூக்களும் பூத்துக் குலுங்க ஆரம்பித்துவிடும். -படித்ததில் பிடித்தது
தேவி கடாரம்
"கடைசி இலை" (The Last Leaf) என்பது William Sydney Porter என்பவர் எழுதிய சிறுகதை. இந்தக் கதை 1907-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "The Trimmed Lamp, and Other Stories" என்ற தொகுப்பில் இடம் பெற்று உள்ளது.
"கடைசி இலை" கதையைத் தழுவி தொடர்ச்சியாகத் திரைப் படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.
1912 - "பாலிங் லீப்ஸ்" (Falling Leaves)
1917 - டூ ரீல் சைலன்ட்
1952 - "ஓ ஹென்றிஸ் புல் ஹவுஸ் (முழுமையான வீடு) என்கிற தொகுப்பு வெளியானது.
1983 - ஓ ஹென்றிஸ் புல் ஹவுஸ் படத்தினை தழுவி இயேசு கிறிஸ்துவின் கடந்த நாட்களும் சாதுக்களும் (en:The Church of Jesus Christ of Latter-day Saints) படம் வந்தது. இது 24 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும் படமாகும்.
2013 - வெளிவந்த இந்தி படமான ’லூதெரா’ இந்தச் சிறுகதையை மையமாகக் கொண்டது.
"The Last Leaf" has been adapted frequently on the stage and the big screen. Notable short film adaptations include
The 1912 film Falling Leaves is a very loose adaptation.
The 1917 two-reel silent film The Last Leaf, one of a series of O. Henry works produced by Broadway Star Features.
In 1952 it was one of five stories adapted for O. Henry's Full House. In this adaptation, the protagonist's nickname is Jo, and Susan (Sue) is portrayed as a sister, not a friend.
In 1983 a screen adaptation was done as a 24-minute film produced by The Church of Jesus Christ of Latter-day Saints. This adaptation is the same as the 1952 film version from O. Henry's Full House.
The 1986 Hindi TV series Katha Sagar adapted this for its seventh episode "Kalakriti" ('art form'), which was directed by Shyam Benegal.
Paranoia Agent's 9th 'Etc.' episode contains a segment depicting it within the context of the series.
The 2013 Hindi film Lootera is loosely based on "The Last Leaf".
The 21st episode of the Pokemon Sun and Moon anime features a Stoutland on the brink of death. The symbol of its death, the dying tree, is a reference to the story.
இந்தக் கதை இங்கிலாந்து கிரீன்விச் கிராமத்தில் நடப்பதாக எழுதப்பட்டு உள்ளது. கதையின்படி ஒரு ஓவியர் இளங்கலைஞரைக் காப்பாற்றுகிறார். ஒருவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்.
அவர் ஜன்னல் வழியே ஒரு கொடியில் உள்ள இலைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலையை உதிர்ந்துகொண்டு வருகிறது. கடைசி இலை உதிரும் பொழுது தான் இறந்து விடுவதாக நினைத்து கொண்டு படுத்து இருக்கிறார்.
அன்றைய தினம் கடுங்காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. விடிந்து பார்க்கிறார். அந்த ஒரே இலை உதிராமல் இருக்கிறது. நோயாளி நம்பிக்கை கொள்கிறார்.
அந்த இலை உண்மையான இலை இல்லை, இலையைப் போல தோற்றம் அளிக்குமாறு ஓவியத்தை வரைந்தவர் அந்த ஓவியர்.
😃 நன்றி ஐயா....🙏.
பதிலளிநீக்கு