08 ஜனவரி 2021

சிங்கப்பூர்த் தமிழர்கள் பற்றி பாலபாஸ்கரன்

08.01.2021

முன்னாள் மலேசிய வானொலி தமிழ்ப்பிரிவு நிகழ்ச்சி தயாரிப்பாளர்


1. ஆங்கிலத் தமிழர்கள்.. ஆங்கிலம் படித்துவிட்டு அரசாங்க வேலையில் இருப்பவர்கள். தமிழ் தெரியாது. ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். நிறைய பேருக்கு அப்படி ஒன்றும் பெரிய படிப்பு இருக்காது. அதிகப் பட்சமாக O Level, A Level படித்து இருப்பார்கள். அவ்வளவுதான்.

2. தமிழ்த் தமிழர்கள்.. தமிழ் மட்டுமே பேசுபவர்கள். தமிழ் மட்டுமே படித்தவர்கள். குறைந்த வருமானம் கொண்டவர்கள். சிங்கப்பூர்த் தமிழரில் பெரும்பான்மையோர் இவர்களே.

பாலபாஸ்கரன்

3. பயணத் தமிழர்கள்.. கோ. சாரங்கபாணி ஒரு முறை தமிழ் முரசு தலையங்கத்தில் இந்தச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார். இவர்களுக்குக் குடும்பம் ஊரில் இருக்கும். கடுதாசி மூலம்தான் குடும்பமே நடக்கும். கடுதாசி வாழ்க்கை எனலாம்.

குழந்தை பிறப்பு, நல்லது கெட்டது எல்லாம் பல நாள் கழித்துக் கடிதத்தில்தான் வரும். ஊருக்குப் போகிறவரிடம் சாமான்கள் கொடுத்து வீட்டில் தரச் சொல்வது. ஊரில் இருந்து ஆள் வந்தால் அவரைப் பார்த்து மணிக் கணக்காக ஊர் விசயங்களை விசாரிப்பது.

இவர்களைக் காலி ஆட்கள் என்றுகூடச் சொல்வார்கள். உள்ளூர்க்காரர்கள் இவர்களை ஊர்க் குடுமிகள் என்று கேலி செய்வதும் உண்டு. பதிலுக்கு நாட்டான் என்று உள்ளூர்க்காரர்களைக் கேலி செய்வர் பயணத் தமிழர். (மலேசியம்) 07.01.2021.

ந.பாலபாஸ்கரன் வரலாறு

ந. பாலபாஸ்கரன் தமிழ்நாடு புதுச்சேரியில் பிறந்தவர். சிறுவயதிலேயே பினாங்கு வந்தார். கூலிம் நகரில் உள்ல சுல்தான் பட்லிஷா பள்ளியில் மூன்றாம் படிவம் வரை உயர்நிலைப் படிப்பு. பின்னர் புக்கிட் மெர்தாஜாம் ஹை ஸ்கூல் பள்ளியில் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வு.

1963-ஆம் ஆண்டில் அப்போதைய ரேடியோ மலாயாவில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறையில் எம்.ஏ கல்வி.

பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1982-ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் குடி பெயர்ந்தார். சிங்கப்பூர்த் தொலைக்காட்சியின் தமிழ்ச் செய்திப் பிரிவில் சில ஆண்டுகள் செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

2000-ஆம் ஆண்டில் பதவி ஓய்வு பெற்றார். 2017-ஆம் ஆண்டுக்கான கரிகாலச் சோழன் விருது இவருக்கு வழங்கப் பட்டது.  






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக