29.12.2020
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் ஆண்டவனை வணங்கிவிட்டு...
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பாகவன் முதற்றே உலகு
என்ற தமிழ்மொழிக் குறளுக்காக உண்டியலில் ரி.ம 1.00 வெள்ளியைப் போட்டாலும்...
(கண்டிப்பாகப் போடுவார்கள்... நம் இனத்தவர்கள்... புரிந்து கொண்டார்கள் தமிழ் மொழியின் அவசியத்தை)
எத்தனையோ தமிழ்ப்பள்ளிகளுக்கு கொடுத்து உதவிகள் செய்து இருக்கலாம்...
ஆலயத்தில் உண்டியலில் போட்ட பணம்...
ஆரம்பத் தமிழ்ப் பள்ளியில் தமிழ்ப் பாடமாகத் தமிழ்ப் பிள்ளைகளுக்குப் போதிக்கப் படுகிறது என்ற திருப்தியாவது ஒவ்வொரு தமிழரிடமும் இருந்து இருக்கும்.
அது சரி... ஆலயத்தில்... அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு...
ஆலயத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கு உண்டியல் வைக்கலாம்... தவறு இல்லையே...
தமிழ் வாழ... தமிழ்பள்ளிக்கு என ஓர் உண்டியல் வைப்பது தவறாக இருக்குமோ...
மனதில் பட்டதைச் சொடுக்கி விட்டேன்.
இன்று ஆண்டு இறுதி செவ்வாய்க் கிழமை; ஆண்டு இறுதி பொளர்ணமியும் கூட...
இந்தப் பொளர்ணமியில் எல்லாத் தடைகளும் கஷ்டங்களும் நீங்கி...
உலகத் தொற்று நோயாக விளங்கும் கொரோனா-19 என்ற நோயும் நீங்கி....
சிறப்பாக வாழ்வில் செழிக்கப் பிரார்த்தனைகள் செய்வோம்.
ஊடகத்தைப் பின்னுக்குத் தள்ளி உலகச் செய்திகளைக் கையடக்கத்திற்குள் கொண்டு வந்து ராஜ நடைபோடும் மலேசியம் புலனத்தின் அனைத்துப் புகழும் புலனத்தின் அன்பர்களைச் சாரும்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக