01 ஜனவரி 2021

சுற்றுச் சூழலைக் காப்பாற்றுவது மனித இனத்தை காப்பாற்றுவதாகும் - கரு. ராஜா

25.12.2020

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பேரன் ஸ்டார் (25.12.2020) நாளிதழில் ஒரு விழிப்புணர்வு கட்டுரை எழுதி இருக்கிறார். அதன் தமிழாக்கத்தைப் பதிவு செய்கிறோம்.)

இயற்கைச் சூழலின் பாதிப்பு என்பது பெரும்பாலும் எதிர்பார்க்காத சூழ்நிலைகளைக் கொண்டது. அந்த வகையில் கோவிட் -19 பெரும் தொற்று நோயில் இருந்து ஒரு பெரிய பாடத்தை நாம் கற்றுக் கொண்டோம்.

கொரோனா வைரஸைப் பொறுத்த வரையில், ஈரமான சூழலைக் கொண்ட சந்தைகள்; அங்கே சில விலங்கு இனங்களுக்கு அதிகமான திறந்த இருப்பிட சூழ்நிலையை உருவாக்கித் தந்து உள்ளன. அதனால் கொரோனா வைரஸின் முதல் மனிதப் பாதிப்பு அங்கே ஏற்பட்டது. அதுவே இயல்புச் சூழலில் விலங்கில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் காரணமாகவும் அமைந்து போனது.

இத்தகைய நிகழ்வுகள் தான் உலகின் ஒருமைப் பாட்டையும்; உலகின் சமநிலைத் தன்மையைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும்; இயற்கை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. ஏனெனில் அதன் வளங்களில் இருந்தும்; அதன் பாதுகாப்பில் இருந்தும் தான் நாம் நல்ல நல்ல பயன்களை அடைந்து வருகிறோம்.

உலகிற்குத் தேவையான ஆக்ஸிஜன் எனும் உயிர்க் காற்றின் பாதி அளவு கடல்களில் இருந்து கிடைக்கின்றது. அதே வேளையில் கரியமிலக் காற்றையும் வெப்பத்தையும் பெரிய அளவில் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு கொள்கலனாகவும் கடல்கள் விளங்கி வருகின்றன.

கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு அழிவு ஏற்படுமானால்; ஆழ்கடல்கள் சேமித்து வைத்து இருக்கும் கரியமிலக் காற்று அனைத்தும் வெளியாகும் சூழல் ஏற்படும். ஏறக்குறைய 1.02 பில்லியன் டன்கள் கரியமிலக் காற்று (bit.ly/iucn_climate).

கிரிபாட்டி நாட்டில் (Republic of Kiribati) லைன் தீவுகள் (Line Islands) உள்ளன. அங்கே அறிவியலாளர்கள் ஆய்வுகள் நடத்தினார்கள். மனிதர்களின் இடையூறுகளினால் பவளப் பாறைகளுக்கும்; சுற்றுச் சூழலுக்கும் பெருத்த தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. திடுக்கிடும் தகவல்கள் அந்த ஆய்வுகள் மூலம் தெரிய வருகின்றன.

உணவு வலைப் பின்னணியில் ஏற்படும் இடையூறுகளினால் பல்லுயிர்களுக்கும் குறைபாடுகள் எற்படுகின்றன. தவிர தீவுகளில் வாழும் மனிதர்களைக் காட்டிலும் பவளத் தீவுகளில் 10 மடங்கு அதிகமாகப் பாக்டீரியாக்கள் வாழ்வதாகக் கண்டு அறிந்தனர்.

கடல் சார்ந்த புலால் பொருள்களுக்காகப் பெரிய வகை கிளிஞ்சல்கள் அங்கு அறுவடை செய்யப் படுக்கின்றன. அந்தக் கிளிஞ்சல்கள்; கடல் நீரில் வாழும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அகற்றும் இயற்கை வடிகட்டிகளாகச் செயல் பட்டு வருகின்றன. இதையும் கண்டு அறிந்தனர்.

ஆகவே இந்தப் பெரிய வகை கிளிஞ்சல்களை அதிகமாக அறுவடை செய்வதால் இயற்கைச் சமநிலையில் பாதிப்புகள் ஏற்படும். உண்மையில் பார்க்கப் போனால் நோயை உருவாக்கும் நோய்க் கிருமிகளை மறைமுகமாக ஊக்குவிப்பது போலாகும்.

கடலில் வாழும் உயிரினங்களின் அழிவு கொரோனா போன்று அடுத்த ஒரு ஜூனோடிக் தொற்று நோய்க்கு; அதாவது விலங்கில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய் வகைக்கு வழிவகுக்கலாம். 2005-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வு அவ்வாறு சுட்டிக் காட்டுகின்றது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இயற்கை முக்கியமான பங்கு வகிக்கிறது. இதை நாம் உணர்ந்து கொள்வது மிக முக்கியம். ஆகவே அந்த இயற்கையின் தொடர்ச்சியான ஆரோக்கியத்தை உறுதிப் படுத்துவது முக்கியம். இயற்கையின் பாதுகாப்பை உறுதி செய்வதும் மிக முக்கியம்.

புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் சர் டேவிட் அட்டன்பரோ கூறி உள்ளார்: “உண்மை இதுதான்: இயற்கை உலகம் மாறிக் கொண்டு வருகிறது. இருப்பினும் நாம் அந்த உலகத்தை முற்றிலும் சார்ந்து வாழ்கிறோம். இயற்கை நமக்கு உணவு, நீர் மற்றும் காற்றை வழங்குகிறது. இது நமக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பொருள்கள். அதை நாம் பாதுகாக்க வேண்டும்.”

ஹரேஷ் ஜெயந்த் மகாலிங்கம், ஈப்போ
ஸ்டார் நாளிதழ், 25.12.2020

Panayapuram Athiyaman: புலிக்குப் பிறந்தது பூனையாகுமா. நல்வாழ்ததுகள் தம்பி

Ratha Patchiappan:
பூவோடு‌  சேர்ந்த ‌நாரும் மணக்கும், என்பது மிக சரியாக  இருக்கிறது.🌹🌹.நல் வாழ்த்துக்கள்

Raja Sg Buluh: 17 வயது பேரன் இந்த போடு போடுரார்.ஐயா முத்துக்கிருஷ்ணன் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்டுரை எழுதுவது ஒரு கைவந்த கலையாகிவிட்டது. அதுவும் ஆங்கில கட்டுரை.பாராட்டுக்கள் தம்பி. எதிர்காலத்தில் பெரிய எழுத்தாளராய் வருவாய்.

Seliah Sellam: மலாக்கா முத்துகிருஷ்ணன்  அவர்களின் பேரனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்

பெருமாள் கோலாலம்பூர்: சிறுசு எழுதும் விடயம் பெருசு... தமிழாக்கமுடன் பகிர்வது் மகிழ்ச்சி. நன்றி.

https://www.thestar.com.my/opinion/letters/2020/12/25/saving-the-environment-will-save-the-human-race-too

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக